பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே, புனரமைக்கப்பட்டு வரும் கோவில் மூலஸ்தானத்தில், நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுங்குவார்சத்திரம் அடுத்த, பால்நெல்லூர் கிராமத்தில், தான்தோன்றி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கிராம மக்கள் சார்பில், புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் மூலஸ்தானத்தில், புதிய அம்மன் சிலையை வைப்பதற்காக அளவெடுக்க, நேற்று பகல் 1:00 மணிக்கு, கோவில் நிர்வாகிகள் மற்றும் சிலை சிற்பி ஆகியோர் மூலஸ்தானத்திற்கு சென்றனர். அப்போது, கோவில் உள்ளே இருக்கும் பழைய அம்மன் சிலையை சுற்றி, பெரிய நல்லபாம்பு படுத்து இருந்தது. இதை கண்ட கோவில் நிர்வாகிகள், செய்வதறியாமல் மூலஸ்தானத்தில் இருந்து வெளியேறினர். இத்தகவல், கிராம மக்களுக்கு தெரிய வந்தது. மக்கள் கோவிலில் கூடி, பாம்பை பக்தி பரவசத்துடன் பார்த்தனர். மாலை 5:00 மணி வரை, அம்மன் சிலையை விட்டு பாம்பு வெளியேறவில்லை. இதனால், பால்நெல்லூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.