ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நவக்கானி தாசன்செட்டிவலசில், ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீவீரநாராயண பெருமாள் திருக்கோயில், வீரமாத்தி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாளன்று, ஸ்ரீரங்கம் பெரிய கோயில் சுந்தர்பட்டர் மற்றும் கண்ணன்பட்டர் தலைமையில் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்காவடி அழைத்து வரப்பட்டது. நேற்று முழுமுதற் கடவுளுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா, நிவேதனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வீரமாத்தி அம்மன் திருக்கோயில் விமானம், வீரநாயண பெருமாள் மற்றுமுள்ள பரிவார தேவதைகளுக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேம் நடந்தது. பட்டிமன்றம், கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, "கண்ணனும் கர்ணனும் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கற்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள், மும்முடியார் குலம் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.