பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
ஊத்துக்கோட்டை: ஆரணி சித்தார்த்தி விநாயகர் கோவிலில், 11ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அடுத்த, ஆரணி பஜார் தெருவில் அமைந்துள்ளது, சித்தார்த்தி விநாயகர் கோவில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், சங்கடஹர சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம் இரவு, 11ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நான்கு கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி கலச அபிஷேகம், பவித்திர சமர்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை, பஜார் தெருவில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சர்ப்ப கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தி தினத்தை ஒட்டி, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.