பதிவு செய்த நாள்
26
ஆக
2013
10:08
சிங்கபெருமாள்கோவில்: பாடலாத்திரி நரசிம்மபெருமாள் கோவிலில் உள்ள, சுத்த புஷ்கரணி குளம், போதிய பராமரிப்புஇல்லாததால், மாசடைந்து வருகிறது.சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி பகுதியில், பிரசித்தி பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு அருகில், புண்ணிய தீர்த்தமான, சுத்த புஷ்கரணி குளம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்நிலையில், குளத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அதில், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால், குளத்துநீர் மாசுஅடைந்து, அவ்வப்போது மீன்கள் இறந்து மிதக்கின்றன. மேலும், பக்தர்கள் குளத்தில் நீராட முடியாமல் தவிக்கின்றனர். எனவே, குளத்தை பராமரிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அறநிலையதி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.