Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடபாதி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் ... சின்னசேலம் புனித தெரசாள் ஆலய பவள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதனூர் கோவில் இடம் ஏலம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
10:08

உளுந்தூர்பேட்டை: ஆதனூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை திருவண்ணாமலையில் ஏலம் விட இருந்ததை கிராம மக்களின் முயற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா ஆதனூரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு 14.75 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, பூஜைகள் செய்யப்பட்டன. அதே போல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு என 37 செண்ட் நிலம் ஆதனூர் அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ளது. வருவாய் துறையினரின் குளறுபடியால் ஆதனூர் கோவிலுக்கு சொந்தமான இடம், யூடிஆரில் திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோவில் இடத்துக்கு சொந்தமானதாக மாறியது. இதனால் இந்த இடத்தில் நஞ்சையில் 4.52 ஏக்கர் நிலமும், புஞ்சையில் 10.23 ஏக்கர் என 14.75 ஏக்கர் முதன்முறையாக குத்தகை சாகுபடி உரிமைக்கு பொது ஏலம் விடும் முயற்சிகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரஞ்ஜோதி இறங்கினார். குத்தகை காலம் 23.08.2013 முதல் 30.6.2014ம் தேதி வரை ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டு கடந்த 23ம் தேதி திருவண்ணாமலையில் ஏலம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த அதனூர் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அவர் கண்டு கொள்ளாததால், அதிருப்தியடைந்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஏலம் விட தடை விதித்ததால் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar