திருக்கோவிலூர்: பொம்மைகளை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனமான லீகோ, ஆற்காடு லுத்தரன் திருச்சபை பள்ளி மேம்பாட்டு திட்டம் இணைந்து கற்றல் மேம்பாட்டுத்திறன் பயிற்சி முகாம் திருக்கோவிலூர் சைலோம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 95 பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். லீகோ நிறுவனம் ஒவ்வொரு பள்ளிக்கும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்கியது. இந்தியா 2040 என்ற மையக்கருத்தினை அடிப்படையாக கொண்டு லீகோ உபகரணங்களை கொண்டு மாணவர்கள் தங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல்வேறு படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர். பரிசளிப்பு விழாவிற்கு வந்தவர்களை திட்ட செயல் இயக்குநர் சுந்தர் வரவேற்றார். ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயர் மறைதிரு விஜயகுமார் தலைமை தாங்கினார். டென்மார்க் நாட்டை சேர்ந்த கல்வி ஆலோசகர் ஹேனா முன்னிலை வகித்தார். திருச்சபையின் துணைத்தலைவர் நீதிதாஸ் நிமலன், செயலாளர் ஏசுஅடியான், பள்ளி வாரியத்தலைவர் சாமுவேல் கென்னடி, பொருளாளர் குருதாஸ் பேசினர். டி. எஸ்.பி., பிரபாகர் மாணவர்களை பாராட்டினார். விழா ஏற்பாடுகளை ஜெரால்டு தலைமையிலான குழுவினர் செய்தனர்.