சேலம்: சேலம், சொர்ணபுரி அனெக்ஸ், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி காலை, 7.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பக்தர்கள் தீர்த்தக்குடம் ஏந்தி வந்தனர். மாலை, 5 மணிக்கு விநாயகர் பூஜை, மாதா பூஜை, பாலிகை பூஜை நடந்தது. இரவு முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன், இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. காலை, 7.45 மணிக்கு சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கீர்த்திவாசன் நடத்தினார். கும்பாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கோபுர தரிசனம் செய்தனர்.