ஓசூர்: பேரிகை சென்னராயன் ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாணம் உற்சவ விழா நடந்தது. பேரிகை அடுத்த தட்ட அள்ளியில், 40 ஆண்டு பழமையான சென்னராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னராயசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. வேத பண்டிதர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்தனர். ஓசூர், பேரிகை, பாகலூர் மற்றும் சூளகிரி சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிப்பட்டனர். ஸ்ரீதேவியும், சென்னராயன் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.