பதிவு செய்த நாள்
26
ஆக
2013
11:08
ஓசூர்: ஓசூர் அடுத்த காமன்தொட்டியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில், சிராவண சனிக்கிழமையையொட்டி, 24ம் தேதி விசேஷ பூஜைகள் நடந்தது. காலை, 5 மணி முதல், 6 மணி வரை அபிஷேகம் நடந்தது. காலை, 7 மணி முதல் மாலை, 7 மணி சர்வதரிசனம் நடந்தது. நேற்று( ஆக., 25) காலை, 6 மணி முதல், 8 மணி வரை நாதஸ்வர கச்சேரி, 8 மணி முதல், 10 மணி வரை சங்கீர்த்தனைகள் கச்சேரி நடந்தது. 10 மணி முதல் 11.30 மணி வரை சாருலோசனா பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணி முதல் மதியம், 2.30 மணி வரை ஹரி கதை காலட்சேஷபம் நடந்தது. மதியம் 2.30 மணி முதல் மாலை, 4.30 மணி வரை ஓசூர் வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் பாட்டுக்கச்சேரி, பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4.30 மணி முதல் 6 மணி வரை, ஓசூர் இஸ்கான் குழுவினரால் சங்கீர்த்தனை பஜனை நடந்து. வரும், 31ம் தேதி, நான்காம் சிராவண சனிக்கிழமை அதிகாலை, 5 மணி முதல், 6 மணி வரை விசேஷ அபிஷேகம் நடக்கிறது. காலை, 7 மணி முதல் மாலை, 7 மணி வரை சர்வ தரிசனம் நடக்கிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.