மஞ்சூர்: ராமாயண சுயம்வர நிகழ்ச்சியில் சிறுமியர் பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தினர்.மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில் உள்ள நாராயணமூர்த்தி கோவிலில் தர்ம ரக்ஷன் சமதியின் ராமாயண ஞான வேள்வி நிகழ்ச்சி 9 நாட்களாக நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ராமாயண சுயம்வர நிகழ்ச்சியில் சிறுமியர் பல்வேறு வேடங்களில் தோன்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மஞ்சூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சூரிய தேவன், கோவில் பூசாரி சிவராஜ், ஆனந்த், மோகன் உட்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.