கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே வனதுர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஒன்பதாமாண்டு நிறைவையொட்டி சிறப்பு யாகம், பூஜை நடந்தது. புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்த கிள்ளுக்கோட்டையில் வனதுர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேம் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மஹாசண்டி யாகம் நடந்தது. கோவில் குருக்கள் ராஜா தலைமையில் 12 சிவாச்சாரியார்கள் பங்கேற்று, சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில், விக்னேஷ்வரா பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.