பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
தூத்துக்குடி: திருச்செந்தூரில், ஆவணி உற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும், 4 ம் தேதி, தேரோட்டம் நடக்கவுள்ளது. திருச்செந்தூரில், நேற்று, அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு, விஸ்ரூப தீபாரதனை நடந்தது. 2:00 மணிக்கு, உதய மார்தாண்ட அபிஷேகம், தீபாரதனையும்,3:00 மணிக்கு, வெள்ளி சப்பரத்தில் கொடிபட்ட வீதியுலாவும் நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தி, கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு, 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, வேதபராயணம், தேவராம்,பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 12 நாட்களும், சாமி வீதியுலா நடக்கவுள்ளன.