திருவாரூர்: சோழர் கால, ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவாரூர், விஜயபுரத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட, ரேணுகாதேவி அம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 45 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம், நேற்று காலை, 9:45 மணிக்கு நடந்தது.