பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
ராமேஸ்வரம்: பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, கூடுதல் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு, ஒன்பதாவது பட்டாலியன் போலீசார், 125 பேர், ராமேஸ்வரம் வந்துள்ளனர். மத்திய உளவு பிரிவு, பாகிஸ்தான் தீவிரவாதிகள், இலங்கையிலிருந்து, ராமேஸ்வரம் வழியாக, தமிழகத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் போலீசார், தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கடலோர காவற்படை, கடற்படை, மரைன் போலீசார், கடல்மார்க்கத்தில், 24 மணிநேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கடலில் தென்பட்டால், கடற்படைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என, மீனவர்களிடம், பாதுகாப்பு பிரிவினரின் போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரம் பாதுகாப்பிற்காக, மணிமுத்தாறு, ஒன்பதாவது பட்டாலியனை சேர்ந்த, 125 போலீசார் பாதுகாப்பு பணிக்கு, நேற்று, ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள், பாம்பன் பாலம், மண்டபம், தனுஷ்கோடி, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில், துப்பாக்கிகளுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.