Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு பணி ... சென்னையில் சோழர் கால ஓவியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரங்களை மணமக்களாக்கி கிராம மக்கள் வினோத திருமணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

திருவெண்ணெய்நல்லூர்: அரசு, வேம்பு ஆகிய மரங்களை மணமக்களாக நினைத்து, கிராம மக்கள் தடபுடலாக, திருமண சடங்குகள் நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் மாணிக்க விநாயகர் கோவில் வளாகத்தில், அரச மரமும், வேப்ப மரமும் பிணைந்து வளர்ந்துள்ளன. இவற்றுக்குத் திருமணம் செய்தால், இப்பகுதி சுபிட்சமடையும் என, ஜோதிடர்கள் கூறினர். இதையடுத்து, ஊராட்சி தலைவர் ஜெயந்திபாபு மற்றும் கிராம பொதுமக்கள், மரங்களை மணமக்களாக்கி, திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த, 22ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, திருமணம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையும், கலசபூஜை, பூர்ணாஹூதியும் நடந்தது. 57 தட்டு சீர்வரிசைகள் மற்றும் பாலி கொண்டு வரப்பட்டது. காலை, 9:10 மணிக்கு அரசு, வேம்பு மரங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அரச மரத்திற்கு பட்டுவேட்டி, வேப்ப மரத்திற்கு பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 10:10 மணிக்கு, திருமாங்கல்யதாரணம், தீபாராதனை நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாங்கல்ய பொருட்களும், திருமண விருந்தும், தாம்பூலப்பையும் வழங்கப்பட்டது. சங்கீத இசைக் கச்சேரி மற்றும் நாதஸ்வர கச்சேரி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar