பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
ராஜபாளையம்: ராஜபாளையம் நீர்காத்த அய்யனார்கோயில் வனப்பகுதியில், மழைவேண்டி, பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர், நேற்று காலை, தியானத்தில் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே, ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு மழை பொய்த்ததால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர், உப்புதண்ணீரை, விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. மழை வேண்டி, பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ,நீர்காத்த அய்யனார்கோயில் வனப்பகுதியில், நேற்று காலை தியானம் நடந்தது. சகோதரி சுதா பேசுகையில், ""இயற்கையுடன் நல்லிணக்கம் இருந்தால் தான், அதன் பயன்களாகல மழை போன்றவை கிடைக்கும். பாகுபாடு இல்லாமல்ல மேடு, பள்ளங்களில் நீர் ஓடுவதுபோன்ற மனநிலைல மனிதனுக்கும் வேண்டும். நீரின் குணத்தை மனிதன் பெறவேண்டும்ல என்றார். காலை 6.30 மணி முதல் 8 மணிவரை தியானத்தில் ஈடுபட்டனர்.