பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூரில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோயிலில் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை கொடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு கொடை விழா இன்று நடக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தன காப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறுசுற்றி ஆடுதலும், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம்,
சிறப்பு பூஜையை தொடர்ந்து வானத்தில் மத்தாப்பு வேடிக்கை, சிறப்பு சிங்காரி மேளதாளத்துடன் கற்பகபொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை 8 மணிக்கு உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.