மதுராந்தகம்: தீட்டாளம் கிராமத்தில் உள்ள துலுக்காத்தம்மன் கோவிலில், 6ஆம் வார ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த தீட்டாலம் கிராமத்தில், புகழ் பெற்ற அன்னை துலுக்காத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆடி மாத 6ஆம் வார திருவிழா நடந்தது. விழாவையொட்டி, 25ம் தேதி காலை, 6:௦0 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலும், பகல் 12:00 மணிக்கு கரகம் எடுத்தலும், பக்தர்களுக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.இதில் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பகல் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களிடையே எழுந்தருளி திருவீதியுலா சென்றார். இதில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.