பழநி : பழநி வேணுகோபால பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா நடந்தது. பழநி காந்திரோடு வேணுகோபாலபெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாளுக்கு, பால், பழங்கள் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கிருஷ்ணர் அவதார அலங்காரமும், உற்சவப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் செய்திருந்தனர். சிறுவர்,சிறுமிகள் கிருஷ்ணர் வேடமிட்டு, திருக்கோயிலை வலம் வந்து, கோலாட்டம்,கும்மியடித்து, வேணுகோபாலபெருமாளை வழிபாடு செய்தனர்.