கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் கோமாதா சிறப்பு பூஜை நடந்தது.கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 28ம் தேதி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலை 4.30 மணிக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை 8.00 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அலங்கார பூஜை, மகா தீபாராதனை, சாற்று மறை தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.