கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.முன்னதாக ராம நாதீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலின் உட் பிரகாரத்தில் வலம் வந்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்திருந்தார்.