சோமனூர்: கள்ளப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம்தேதி நடக்கிறது. கள்ளப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் பழமையானது. கருகம்பாளையம், கள்ளப்பாளையம், செந்தேவிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றன. செப்.,5 காலை 8.00 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. 7ம்தேதி மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து திடலும் நடக்கிறது. 8ம்தேதி காலை நான்காம் கால யாக பூஜையும், புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மூலவர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. அருளாளர்கள், ஆன்மிக சான்றோர் பங்கேற்கின்றனர். தினமும் பரதநாட்டியம், இன்னிசை, பக்தி பாடல்கள் மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.