திருப்பூர்: பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், 32 லட்சம் ரூபாய் செலவில் சோபன மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், கருவறை, முன் மண்டபம் ஏற்கெனவே உள்ளது. தற்போது, கோவில் நிதியில், 72 அடி நீளம், 45 அடி அகலத்தில் சோபன மண்டபம் 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. உபயதாரர்கள் பங்களிப்புடன், மண்டபத்தில் சுதை வேலைப்பாடுகளுடன் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் தொட்டியும், நான்கு லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டபம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.