திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2013 10:09
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான நேற்றுமுன்தினம் ஏழாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், நேற்று எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், பகலில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலாவும் வந்து கோவில் சேர்ந்தார். நேற்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தது. காலை 6.00 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் தேரோட்டம் துவங்கியது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) அன்புமணி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.