திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் திருவாடானை மற்றும் எஸ்.பி.பட்டினம் அணியினர் வெற்றி பெற்றனர். ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான மியுசிக்கல் சேர், சிறுவர்களுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. பூக்குழி விழாவில் பால், பறவை காவடி எடுத்து ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.