பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில், நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிறவி மருந்தீஸர் ஸ்வாமி, பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனைக்கு பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருளி, பிரகாரம் வலம் வந்து, பலி போட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். சிங்களாந்தி அமிர்தவள்ளி நாயகி உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில், நெடும்பலம் காசி விஸ்வநாதர் கோவில், வேலூர் ஸ்வர்ணாம்பிகை உடனுறை ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், தண்டலச்சேரி நீ நெறிநாத ஸ்வாமி கோவில், கச்சனம் கைக்கினேஸ்வரர் கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில் உள்பட சிவன்கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.