போடி: போடியில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 கிலோ தங்கத்திலான பாதக் கவசம் வழங்கப்பட்டது. போடியை சேர்ந்தவர் இலவம் பஞ்சு பேட்டை உரிமையாளர் தங்கத்துரை. இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தங்கத்திலான பாதக் கவசம் வடிவமைக்கப்பட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கும் வகையில் தேவஸ்தான கோயில் பட்டாச்சியர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜை செய்யப்பட்ட பாதக்கவசம் சிறப்பு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.