கள்ளக்குறிச்சி: பத்ரகாளியம்மன் கோவிலில் தோஷ நிவர்த்தி வேண்டி மிள காய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடந்தது. ஆவணி அமாவாசை தினமான நேற்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.