உச்சிப்புளி: உச்சிப்புளி அருகே நாகாச்சி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி, பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிப்பட்டனர். சிறப்பு பூஜைக்கு பின் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.