பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
காவேரிப்பபட்டணம்: மகாளய அமாவாசையை ஒட்டி அங்காள அம்மன், ஆஞ்சயநேயர் கோவில்களில் நாளை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை நாளை நடக்கிறது.இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார்ம, பூஜைகள் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை, 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் மகாளய அமாவாசையை ஒட்டி நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம், 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், அஙகாளம்மன் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், கெரகேடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.