கும்பகோணம்: திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் எழுந்தருளி உள்ள ஒப்பிலியப்பனுக்கும், உற்சவம் தயாருக்கும் விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்க கிரீடங்கள் உபயமாக வழங்கப்பட்டுள்ளன. இவை, முறையே பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன.