பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை கணக்கிட பட்டது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி,விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் செயல் அலுவலர் தனபாலன் முன்னிலையில், கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மகளிர்சுயஉதவிக்குழு பெண்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், காணிக்கை பொருட்களை கணக்கிடும் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் காணிக்கையாக, உண்டியலில் 17லட்சத்து 96ஆயிரத்தி821 ரூபாய், 56கிராம்தங்கம்,115 கிராம் வெள்ளி செலுத்தியிருப்பது தெரியவந்தது. உண்டியல் திறப்பை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.