பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. துவக்க நாளான இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருப்பல்லக்கு, மதியம் 12 மணிக்குள் விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு அம்ச வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. 5ம் தேதி காலை 7.30 மணிக்குள் திருப்பல்லக்கு திருமஞ்சனம், இரவு சந்திர பிரபை, 6ம் தேதிஅனுமந்த வாகனம் உற்சவம், 7ம் தேதி இரவு சேஷ வாகனம் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி தங்க கருட வாகன உற்சவம், 9ம் தேதி யானை வாகன உற்சவம், 10ம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவம், 11ம் தேதி குதிரை வாகன உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி ரதோற்சவம், 13ம் தேதி மட்டையடி உற்சவம், இரவு 9 மணிக்கு பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடு சப்தாவர்ணம், 14ம் தேதி விடையாற்றி உற்சவம், 15ம் தேதி காலை 9மணிக்கு தேசிகர் சுவாமிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணிக்கு மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நடக்கிறது.