பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி சமேதர மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில், இன்று (அக்.,4) மஹாளய அமாவாசையொட்டி சிறப்பு பூஜை மற்றும், 18 படி பூஜை, மோட்ச தீபம் ஏற்றுதல் நடக்கிறது. இன்று, மஹாளய அமாவாசையொட்டி, கோட்டை கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடுகள், யாகங்கள், அன்னதானம், கோ பூஜை போன்ற வழிபாட்டு முறைகள் நம் வாழ்வில் எந்த அளவு முக்கியமோ அதன் பயன் நமக்கும், நம் தலைமுறைக்கும் நன்மையான பயன்கள் பலன்கள் ஏற்பட, நம்பை விட்டு சென்ற மூத்தோரை நினைவில் கொண்டு பித்ரு பூஜைகள் செய்வது நம் புண்ணிய பலன்களை இந்நாளில் பெறலாம். ஒவ்வொரு அமாவாசையும், பித்ரு கர்மாக்கள் அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக, புரட்டாசி பிரதமை முதல் அமாவாசை வரை மஹாளய அமாவாசை வரை பித்ருக்களை நினைவில் வைத்து வழிபட ஏற்ற நாட்களாகும். இந்நிாளில் நதி கரைகளில், வீட்டில் எள், தண்ணீர் கொண்டு நீத்தோருக்கு உண்டான கடமைகள் முடித்து, கோட்டை கோவிலில் நடக்கும் சிறப்பு கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளவது சிறந்த பலன்களை தரும். கோட்டை கோவிலில், கல்யாண காமாட்சியம்மன் சன்னதி நுழைவு வாயில் உள்ள, 18 படிகளில் கூட்டு வழிபாடு இன்று மாலை, 4.30 மணி முதல், 6.15 மணி வரையில் நடக்கிறது. தொடர்ந்து மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மனவளம், குடும்ப வளம், செய்தொழில் வளம், சந்தான, வம்ச வளம் வேண்டி யாகம் நடக்கிறது. பெண்கள், 18 படிகளை வழிபட்டு, காமாட்சி அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, பக்த பேரவை நிர்வாகிகள், கோவில் நிர்வாக அதிகாரி அமுதசுரபி, தக்கார் மாரிமுத்து, கோவில் அர்ச்சகர் செல்லமுத்து குமாரசுவாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.