பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
கரூர்: கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் 83 வது தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. பிரசித்தி பெற்ற கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் இன்று காலை 6 மணிக்கு, கூட்டுப்பாடற் திருப்பலி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு தியானம் மற்றும் அருட் தந்தை ஸ்டீபன் தச்சில் தலைமையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வரும் 12 ம் தேதி வரை நாள்தோறும், திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, தியான மறையுரை, உள்மன காயம் ஆற்றல், நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் மாலை 6 மணி வரை, இரவு 9 மணி வரை நடக்கிறது. வரும் 13 ம்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8.15 மணிக்கு தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் மறையுறை, 10 மணிக்கு வேண்டுதல் தேர்பவனி, மாலை 5.30 மணிக்கு தமிழ் மாநில கார்மேல் சபை தலைவர் சூசை ரத்தினம் தலைமையில் திரு விழா கூட்டுபாடற் திருப்பலி, இரவு 7 மணிக்கு அலங்கார தேர்பவனி வாண வேடிக்கை யுடன் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அருட்தந்தைகள் புஷ்பநாதன், அருண், கிளாடிஸ் ஆகியோர் திவ்ய நற்கருணை ஆசி வழங்குகின்றனர். ஏற்பாடுகளை கரூர் பங்குதந்தைகள் பங்குராஸ், டென்னிசன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.