சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 11:10
திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. இந்த விழாவானது வரும் 14ம்தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது. சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நாளை (5ம் தேதி) மாலை 6 மணியளவில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி அம்மனுக்கு பூஜை வழிபாடு கொலு பூஜையுடன் ஆரம்பமாகிறது. விழா வரும் 13ம் தேதி முடிய 9 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி சிறப்பு வழிபாடு கொலுபூஜை நடக்கிறது. வரும் 14ம் தேதி விஜயதசமி அன்று நந்தி வாகனம், பலிபீடம் பிரதிஷ்டையை முன்னிட்டு மாலை 4 மணி முதல் விநாயகர் ஹோமம், யாகசாலை நவக்கிரக பூஜை, அம்பிகைக்கு அபிஷேகம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் நிர்வாகி சுப்பையா, செங்குந்தர் சமுதாய பொதுமக்கள் செய்துள்ளனர்.