ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் இன்று மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 11:10
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் இன்று (4ம்தேதி) மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. ழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் ரோட்டில் ராமநதியின் வடகரையில் பாலசுப்பிரமணியர், அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. சப்தரிஷிகளின் சாபத்திற்கு அஞ்சிய அக்னி பகவான் சாப நிவர்த்திக்காக ராமநதியின் வடகரையில் ஒரு தீர்த்தம் அமைத்து மீன் உருவம் கொண்டு நீண்ட காலமாக அங்கேயே ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்து தவம் செய்து வந்தார். அக்னி பகவானின் தவத்தையும் வலிமையையும் உணர்ந்து ஈசன் மீண்டும் ஒளியை அளித்து, சக்தியை வழங்கிய இடம் அக்னி தீர்த்தக்கரையாகும். இன்று (4ம்தேதி) மாலை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டியும், நிம்மதியின்றி தவிக்கும் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இன்று மாலை சுமார் 6 மணியளவில் நடக்கும் மோட்ச தீப சிறப்பு வழிபாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.