மகா பிரத்தியங்கிரா கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 05:10
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்தகோவிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். இங்கு ஒவ்வொறு அமாவாசை அன்றும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. பக்தர்கள் ஆசைகளை விட்டு யாகத்தில் கலந்து கொண்டு மகா பிரத்தியங் கிரா தேவியை சரணடைந்தால் சத்ரு உபா தைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள். புரட்டாசிமாதம்,மஹாளய அமாவாசையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜை நடத்தப்பட்டன. மதியம் 1மணிக்கு தண்டபாணி கு ருக்கள் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். நிகும்பலா யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மக õ பிரத்தியங்கிராதேவியை பிரார்த்தனை செய்தனர். ஊர்காவல்படையினர் பா டையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஹாளய அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படாதது, பே õலீஸ் பாதுகாப்பின்மை மற்றும் மருத்துவ வசதியின்மையால் பக்தர்கள் மிகு ந்த சிரமத்திற்கு ஆளாகினர். இனிவரும் காலத்திலாவது இது போன்ற நிலை ஏற்படாமல் அரசு உரிய வசதிகளை செய்துதர வேண்டும் என பக்தர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.