பதிவு செய்த நாள்
05
அக்
2013
10:10
மைசூரு: உலகப் புகழ் பெற்ற, மைசூரு தசரா திருவிழா, அக் 5 துவங்குகிறது. ஜம்பு சவாரி, வரும், 14 ம் தேதி நடக்கிறது.கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி அன்னைக்கு பூஜை செய்து, அக் 5 காலை, தசரா விழா துவங்குகிறது. விழாவை, ஞானபீட விருது பெற்ற, சந்திரசேகர கம்பாரா துவக்கி வைக்கிறார். முதல்வர் சித்தராமையாவும், இதில் பங்கேற்கிறார். தசரா திருவிழாவை முன்னிட்டு, சாமுண்டி கோவில் உட்பட, பல இடங்களில், பல விதமான பூக்கள் மற்றும் மாவிலையால், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதால், உரிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சாமுண்டி மலையில் முக்கியமான இடங்களில், கலாசார நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 14 ம் தேதி ஜம்பு சவாரி நடக்கிறது. அன்றைய தினம் யானைகள் அணிவகுக்க, பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும். மைசூரு அரண்மனையும் இப்போதே, மின்னொளியில் ஜொலிக்கிறது.