பதிவு செய்த நாள்
05
அக்
2013
10:10
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகாளய அமாவாசை தினமான அக் 4, முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பூஜை செய்து, புனித நீராடினால், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்ற ஐதீகம். அதன்படி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், அக் 4 ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, பூஜை செய்தனர். பின், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள, 22 தீர்த்தங்களிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். ஆடி, தை அமாவாசையை விட, அக் 4 கூடுதலான பக்தர்கள் குவிந்ததால், நான்கு ரதவீதிகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகள் நிரம்பி வழிந்தன. "கார் பார்க்கிங்கில் நிறுத்த இடமின்றி, வாகனங்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
பவானி கூடுதுறை: அதேபோல், ஈரோடு மாவட்டம், பவானியில், காவிரி, பவானி, அமுதநதி சங்கமிக்கும், கூடுதுறையிலும், அக் 4 ஏராளமானவர்கள் அக் 4 புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின், கூடுதுறையில் அமைந்துள்ள, சங்கமேஸ்வரர் கோவிலிலும் தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:00 மணி முதலே, கூடுதுறையில், கூட்டம் அலைமோதியது. மூன்று நதிகள் சங்கமாகும் இங்கு, தற்போது, இரு கரை தொட்டு ஆற்றில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடினர்.