பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மகாளய அமாவாசையையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.முன்னோர்களுக்கு வழிபாடு:மகாளய அமாவாசையையொட்டி, அம்பராம்பாளையம் ஆற்றுப்பகுதியில் பலரும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். இதனால், ஆற்றுப்பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.