திருவெண்ணெய்நல்லூர் : மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவெண்ணெய்நல்லூரில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். இந்துக்களின் கலாசாரத்தில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் திவசம் கொடுப்பது வழக்கம். இவ்வாறு கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையில் தர்ப்பணம் செய்கின்றனர். இதன்படி அக் 4 காலை திருவெண்ணெய்நல்லூர் குளக்கரையில் புரோகிதர்கள் முரளி,பாஸ்கர், வெங்கட்ராமன் முன்னிலையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்