மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அக் 4 இரவு நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அக் 4 இரவு மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். வழக்கமாக இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அக் 3 இரவு 10 மணி முதல் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் 11.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளியபோது கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழுப்புரம் டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கினர்.