புதுச்சேரி: முத்தியால்பேட்டை வேணுகோபால் கோவிலில், நவராத்திரி முதல் நாளான நேற்றுமுன்தினம், திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். முத்தியால்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. முதல் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, மாலை, உற்சவர் திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார். வரும் 14ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில், தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.