பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ள கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர், ஒரே சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். சிறப்புகள் பெற்ற கிரிகுஜாம்பிகைக்கு நேற்று முன்தினம் முதல் நவராத்திரி விழாவும், அபிராமி அந்தாதி சமய சொற்பொறிவு விழாவும் துவங்கி நடக்கிறது.நவராத்திரி விழா நாட்களில் மாலை, 6 மணி முதல், கிரிகுஜாம்பிகைக்கு ஆயிரம் நாமாவளி நடக்கிறது. மகாலெட்சுமி அலங்காரத்தில் துவங்கி, நேற்று கஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார். இன்று சந்தானலட்சுமி, தொடர்ந்து மகாசண்டி, அம்பாள்தபசு, வீரசண்டி, மகாசூலி, சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். வரும், 13ம் தேதி சரஸ்வதி பூஜையும், 14ம் தேதி விஜயதசமியன்று, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் அம்புபோடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன், உதவி கமிஷனர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.