உத்தமபாளையம்: உத்தமபாளையம் கிழக்குத்தெரு மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. உத்தமபாளையம் கிழக்குத் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடக்கும். புரட்டாசி மாதத்தில் திருவிழா நடக்கும் கோயில் என்ற சிறப்பு பெற்றது இந்த மாரியம்மன் கோயில். இக்கோயிலில் பெருந்திருவிழாவின் துவக்க நாளில் சக்திகரம் எடுக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. இரண்டாவது வாரத்தில் தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களும் பெண்களும் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பக்தர்கள் தரிசித்து அருள் பெற்று வருகின்றனர். அக்., 8 ல் மாரியம்மன் பொங்கல் விழாவும், 9ல் மாவிளக்கு நேர்த்திக்கடன், மாலையில் அலகு குத்தி அம்மன் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.