பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி ராமர் பஜனை கோவிலில், மூன்றாம் சனிக்கிழமை திருவிழா நடந்தது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம் ராமன், சீதை, அவர்கள் குழந்தைகள் லவா, குசா, பட்டம் சூட்டும் பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் ஆகியோர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. ராமருக்கு, பரதன் பட்டம் சூட்டுவது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் இந்த அலங்காரம், தரிசனத்திற்கு வைக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை அப்பகுதிவாசிகள் செய்திருந்தனர்.