பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று, கிராம சாந்தி, நகர சோதனையுடன் தேர்த்திருவிழா துவங்கியது. இன்று முதல், 12ம் தேதி வரை காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சிம்ம வாகனம், அனுமந்தவாகனம், கருடசேவை, யானை வாகனம், திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது.அக்டோபர், 13ம் தேதி காலை, 7.30 மணிக்கு, ஸ்வாமி திருத்தேர் எழுந்தருளல் நடக்கிறது. 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 14ம் தேதி காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனமும், இரவு, 7 மணிக்கு பரிவேட்டையும், 15ம் தேதி இரவு, 7 மணிக்கு சேஷவாகனமும் நடக்கிறது. அக்டோபர், 16ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீரும், மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுதல் நடக்கிறது.அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி உத்தரவுப்படி, செயல் அலுவலர் விமலா ஏற்பாடுகளை செய்துள்ளார்.