பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
கரூர்: கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதில் காலை, 8 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், இரவு, 7.30மணிக்கு அம்பாளுக்கு தீபாராதனைகளும் நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் அம்பாள் சிவதபசு அலங்காரம், தெமுருகன், சேஷ சயனம் துர்க்கா பரமேஸ்வரி, லஷ்மிதேவி, ராஜராஜேஸ்வரி, உமா மகேஸ்வரர், மகாவிஷ்ணு, சரஸ்வதிஅம்மன், அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிக்கிறார். மேலும், 14ம் தேதி சந்திரசேகர சுவாமி அமராவதி ஆற்றுக்கு எழுந்தருளி அம்பு போடுதல், மகர நோன்பு சாவடியில் மண்டகப்படி நிகழ்ச்சி, 15ம் தேதி ஊஞ்சல் அலங்காரம் நடக்கிறது.இதேபோல், கரூர் அபய பிரதான ரங்கநாதசுவாமி கோவிலில், ராமாவதார அலங்காரத்துடன் நவராத்திரி உற்சவம் துவங்கியது. தினமும் காலை, 9 மணிக்கு திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் வெண்ணைத்தாழி, வாமன அவதாரம், லஷ்மி, ஆண்டாள், காளிங்கநர்த்தனம், ராஜதர்பார், சரஸ்வதி அலங்காரமும், வரும், 14ம் தேதி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில்அம்பு போடுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.கரூர் மாரியம்மன் மாவடி ராமசாமி கோவிலில், நேற்று முதல் நவராத்திரி உற்சவம் துவங்குகியது. வரும், 16ம் தேதி வரை, சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடக்கிறது. நேற்று இரவு, 7 மணிக்கு அம்மன் அருள் சொற்பொழிவு பழனியப்பன் பேசினார். தொடர்ந்து சிவசைலி, பாலர்களிக்கூடம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சுஸ்மிதா, ஸ்ரீலயா இசைப்பள்ளி, எல்.என்.வி.என்., பள்ளி, ஜெகன்நாத ஓதுவார் பக்தி இன்னிசையும், 14ம் தேதி விஜயதசமி நாதஸ்வரம், 15ம் தேதி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நலைப்பள்ளி குழுவினர் பக்தி இன்னிசையும் நடக்கிறது.