பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
திசையன்விளை: கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய விழா துவங்கியது.கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 14ம்தேதி வரை நடக்கிறது. விழாவில் முதல் நாளில் இருதயராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் தினமும் பல்வேறு சபையினர், அன்பியங்கள் சிறப்பிக்கும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், பல்வேறு பங்குதந்தையர்கள் மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம் திருவிழா வரும் 11ம்தேதி நற்கருணை பவனியும், 9ம் திருவிழா வரும் 12ம்தேதி நவநாள் சிறப்பு திருப்பலி அசனம், அன்னையின் அலங்கார தேர்பவனி, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை ஆகியவையும், 11 மற்றும் 13ம் தேதியில் ஆடம்பர திருவிழா, கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கல், நுழைவு வாயில் திறப்பு விழா, ஞானஸ்தானம், தேர்பவனியும் நடக்கிறது.வரும் 14ம்தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம், ஊர்பொது அசனம் ஆகியவையும், 15ம் தேதி தூய அந்தோணியாருக்கு நன்றி திருப்பலி சமபந்தி விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை கடகுளம் பங்குதந்தை சில்வஸ்டர் அடிகளார், ஊர்பொதுமக்கள், ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.